செய்தி டீல்: எச்சரிக்கை தேவை! July 18, 2022July 18, 2022 –நஜீப்– வருகின்ற சில நாட்களும் கடந்து போன நாட்களைப் போல மிகவும் கொதி நிலையாகத்தான் அமைய இடமிருக்கின்றது. இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதை என்று வரலாற்றில் ஒரு நிகழ்வு வருகின்றது. கோட்டா ஓடிவிட்டார். ஆனால் இலங்கை அரசியல் நெருக்கடிகள் தீரவில்லை. புதிய பிரதமர், ஜனாதிபதி என்றெல்லாம் தெரிவுகள் இருக்கின்றன. விரைவில் பொதுத் தேர்தலுக்கும் அறிகுறி. குறிப்பாக தலைவர்கள் கடந்த காலங்களைப் போன்று தமது உறுப்பினர்களை விற்று காசு சம்பாதிக்கவும் முனையக் கூடும். எனவே தலைவர்கள் விடயத்திலும் உறுப்பினர்கள் விடயத்திலும் மிகுந்த எச்சரிக்கை தேவை என்று நாம் சொல்லி வைக்க விரும்புகின்றோம். மறுபக்கத்தில் இப்படியான ஈனத்தன அரசியலை இதற்கு மேலும் முன்னெடுத்துக் கொண்டு போய் மாட்டிக் கொண்டால் மக்கள் தண்டணைகளும் கடுமையாக இருக்கும் என்பதனை அண்மையச் சம்பவங்களில் இருந்து இந்த டீல்காரர்கள் பாடம் படித்திருக்க வேண்டும். சமாளிப்புக்காக இல்லை, துரோகம் பண்ணியவர்களுக்கு நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத்தான் இருக்கின்றோம் என்று இனிக் கதை விடவும் முடியாது என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம். நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல் Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in September 11, 2025 Funeral for victims of Israeli attack on Doha under way September 11, 2025September 11, 2025 ‘කාල්ටන් සුළඟත් සැපයි’ කියා මහින්ද විජේරාමෙන් පිටව යයි September 11, 2025September 11, 2025 මහින්දව දොට්ට දානවට විරැද්ධ චාමර විතරයි! September 11, 2025September 11, 2025 மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்ட அமைச்சருக்கு…! September 11, 2025September 11, 2025 இஸ்ரேல் ஏமனில் புதிய வகை தாக்குதல்! தூக்கி வீசப்பட்ட ஹௌதிகள்! September 11, 2025 මහින්ද රාජපක්ෂ හා කෙහෙල්බද්දර පත්මේගේ පාතාල සබදතාත් එළියට. Previous Story புதிய ஜனாதிபதி தேர்தல் Next Story புரட்சிக்கு எதிரான சதிகள் !