டாக்டர் சாபியா…! நடுக்கம்

-நஜீப்-

(நன்றி: 13.10.2024 ஞாயிறு தினக்குரல்)

ஈஸ்டர் தாக்குதலால் பெரும் நெருக்கடிகளுக்கு இலக்கான ஒரு மனிதன் டாக்டர் சாபி. அவருக்குக் கொடுக்கப்பட்ட நோவினைகளால் நாட்டில் வாழ்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களாலும் அவர் நேசிக்கப்படுகின்றார்.

அவரை அனுர தலைமையிலான என்பிபி. அணியில் களமிறக்குவதற்கான முயற்சியும் அதற்கான சந்திப்பும்; நடந்தது. அந்த இடத்தில் நாமும் இருந்தோம்.

அவரது மனைவி அவர் தேர்தலில் நிற்பதை விரும்பாத நிலை இருந்த போதிலும். டாக்டர் சாபி சமூக நலன் கருதி தனது சம்மதத்தை வழங்கி இருந்தார்.

அதற்கு நாமும் சாட்சி. இதனைக் கேள்விப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் டாக்டரை கண்டிக்கு வரவேண்டாம். நீங்கள் வந்தால் எமக்கு ஆபத்து என அலுத்தம் கொடுத்ததுடன் குருணாகலையிலிருந்து வாருங்கள்.

அப்போது எமது வேட்பாளரை அங்கு தவிர்த்து உங்களது வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதாகவும் கெஞ்சி இருக்கின்றார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் இன்று டாக்டர் களத்தில் இல்லை.

என்றாலும் சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகள் இந்தத் தேர்தலில் இலகுவாக கரைசேர முடியாது. சந்தர்ப்பவாத அரசியலால் மக்கள் அவர்கள் மீது மிகுந்த வெறுப்பில் இருக்கின்றார்கள்.

Previous Story

பொதுத் தேர்தல் நகைச்சுவைகள்!

Next Story

அர்ஷத டி சில்வா விடும் ஒப்பாரி!