-நஜீப்-
தேர்தல் கூட்டணிகள் பற்றி பரவலாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்ற இந்த நாட்களில் டலஸ் அலகப் பெருமா இதுவரை எந்தக் கூட்டணியுடனும் இணையவது பற்றி முடிவெடுக்காமல் இருக்கின்றார். இதற்குக் காரணம் அரசியல் ரீதியில் நம்பகத் தன்மையான கூட்டணிகள் எதுவும் நாட்டில் இல்லாமை என்று கூறப்படுகின்றது.
டலஸ் இன்னும் ஜேவிபியுடன் கூட்டணி போடுகின்ற முயறச்சியைக் கைவிட வில்லை. நமக்கு வரும் தகவல்களின் படி தமது கூட்டணியில் இணைந்து கொள்ளாது டலஸ் போன்றவர்கள் விரும்பினால் என்பிபி. கொள்கைகளுக்கு ஆதரவாக தனிப்பட்ட ரீதியில் தமது பரப்புரைகளை மேற்கொள்ள முடியும்.
அதற்கு என்பிபி பொறுபேற்காது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து டலஸ் போன்றவர்களுக்கு தமது நன்னடத்தையை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நன்நடத்தையில் அவர்கள் தேரினால் தமது ஜேவிபி யின் இரும்புக் கதவுகள் டலசுக்குத் திறக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது என்பது எது ஊகம்.
தனது புதல்வர்களே தனது கடந்த கால அரசியலை எதிர்ப்பது மட்டுமல்ல ஜேவிபி.க்கு ஆதரவுhகவும் பேசி வருகின்றார்கள் என்று ஒரு முறை டலஸ் கூறி இருந்தார்.
நன்றி: 10.03.2024 ஞாயிறு தினக்குரல்