ஞானசாரர் முன் அலி சப்ரி,  தெரிவித்த கருத்துக்கள்

-ஏ.ஆர்.ஏ.பரீல்-

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­லணி முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்கு வைப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிறு­வப்­ப­ட­வில்லை. நாட்டில் பல்­வேறு தனியார் சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன.இந்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை மாத்­திரம் இலக்கு வைப்­பது பொருத்­த­மற்­றது என நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி கடந்த சனிக்­கி­ழமை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­ல­ணி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் தெரி­வித்தார்.

நீதி­ய­மைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் தலை­வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லா­ள­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேரர் உட்­பட செய­ல­ணியின் உறுப்­பி­னர்கள் ஏழு பேர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதில் முஸ்லிம் உறுப்­பி­ன­ர் ஒருவரும் கலந்து கொண்­டி­ருந்தார்.

கலந்­து­ரை­யா­டலில் நீதி­ய­மைச்சர் அலி­சப்ரி தொடர்ந்தும் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனா­தி­ப­தியின் எண்­ணக்­ கரு தொடர்பில் ஆராய்ந்து ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கா­கவே அமைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் ஓர் இக்­கட்­டான நிலைக்குத் தள்­ளி­விடும் வகையில் ஆலோ­ச­னை­க­ளையும் சிபா­ரி­சு­க­ளையும் வழங்­கு­வ­தற்­காக அல்ல.

முஸ்லிம் தொடர்­பான விவ­கா­ரங்கள் முஸ்லிம் சமு­தா­யத்தின் கருத்­து­க­ளையும் பெற்றுக் கொண்­டதன் பின்பு எவ­ருக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யிலே கையா­ளப்­ப­ட­வேண்டும். இச்­ செ­ய­லணி ஜனா­தி­ப­திக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கு மாத்­தி­ரமே நிறு­வப்­பட்­டுள்­ளதே ஒழிய சட்டம் இயற்­று­வ­தற்­காக அல்ல.

சட்டம் அல்­லது சட்ட திருத்­தங்கள் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றுக் கொள்­ளப்­பட்­டதன் பின்பு சட்ட வரைபு திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­படும். அதன்பின் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பி­வைக்­கப்­படும். சட்­டமா அதிபரின் அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பின்பு மீண்டும் அமைச்­ச­ரவை மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். அதன்­பின்பு குறித்த சட்டம் அல்­லது சட்­ட­தி­ருத்­தங்கள் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்­பும்­கூட எதிர்ப்­புகள் இருந்தால் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் அதுவே நடை­மு­றை­யாகும்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­லணி முஸ்­லிம்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களைக் கையாண்டு அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­ட­தொன்று அல்ல என்றார்.

வக்பு சபைத் தலைவர்

வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனும் கலந்­து­ரை­யா­டலில் பங்கு கொண்­டி­ருந்தார். வக்பு சபைத் தலை­வ­ரிடம் ஞான­சார தேர­ரினால் சில விளக்­கங்கள் கோரப்­பட்­டன.

நாட்டில் பல பகு­தி­களில் வர­லாற்று புகழ்­வாய்ந்த ஸியா­ரங்கள் மூடப்­பட்­டுள்­ள­தாக சூபி முஸ்­லிம்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணி­யிடம் புகார் செய்­துள்­ளார்கள். இந்த ஸியா­ரங்கள் மீண்டும் திறக்­கப்­ப­ட­வேண்டும் என ஞான­சார தேரர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் பதி­ல­ளிக்­கையில் வக்பு சபைக்­கென சில சட்ட ஒழுங்கு விதிகள் உள்­ளன. அதன்­மூ­லமே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும். முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் நிலவும் இவ்­வா­றான பிரச்­சி­னை­களை நாங்­களே கலந்து பேசி தீர்த்துக் கொள்­கிறோம். எங்­க­ளுக்குள் நிகழும் இவ்­வா­றான சிறிய பிரச்­சி­னை­களை எவ்­வாறு தீர்த்துக் கொள்­ளலாம் என ஆராய்ந்து வரு­கிறோம் என்றார். Vidivelli

Previous Story

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித்தவும் விடுதலை

Next Story

இந்திய தூதரகம் முன் குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்