ஞானக்காவின் ஆக்கிரமிப்பு

நஜீப்

அனுராதபுர திசாவப் பக்கமாக ஒரு நட்சத்திர ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது யாருடைய ஹோட்டல் என்று பார்த்தால் அது ஜனரஞ்சகமான நமது ஞானக்காவின் ஹோட்டல் என்று தெரிய வருகின்றது. அந்த இடம்தானே அரசுக்குச் சொந்தமானது இதில் எப்படி ஹோட்டல் கட்ட முடியும் என்று கேட்டால் காளி பலாத்காரமாகத்தான் அங்கு ஹோட்டலை நிர்மானித்திருக்கின்றது.

இது பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்று அந்த பிரதேச சபையில் தலைவர் தெரிவிக்கின்றார். அதேபோன்று வன இலாக அதிகாரிகளும் நமக்கும் இது தெரியாது என்று கை விரிக்கின்றார்கள். அப்படியானால் இந்த ஹோட்டல் கட்டிஎழுப்பப்படும் வரை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஒரு வேளை ஞானக்காவின் காளிசக்திக்குப் பயந்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தார்களோ என்னவோ தெரியாது. ஆனால் இதன் கட்டிப் பணிகளுக்கு படையினர்தான் உதவி இருக்கின்றார்கள் என்பதும் வேடிக்கையான கதை.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 20.03.2022

 

Previous Story

ரஷ்யாவின் இரகசியத் திட்டம்! மேற்கு நாடுகளிற்கு பெண்டகன் எச்சரிகை

Next Story

அரசாங்கத்திற்கு விசுவாசத்தை காட்டும் அலி சப்ரி