-நஜீப்-
தற்போது தொகுதி வாரியான பிரமாண்டமான கூட்டங்களை ஜேவிபியும் அதனோடு இணைந்த தேசிய மக்கள் சக்தியும் (என்பிபி) நடாத்திக் கொண்டு வருகின்றது. அண்மையில் இதில் விஷேட கூட்டமொன்று தம்புத்தேகம நகரில் நடந்தது.
இது அனுராதபுரம்-கலாவெவ தொகுதிக்கான கூட்டம். இந்த தம்புத்தேகம தான் அணுரகுமார திசாநாயக்க ஊர். அதனால் இந்தக் கூட்டம் பலரது அவதானத்தைப் பெற்றிருந்தது. அங்கு பெரும் கூட்டம் அழைமோதியது. நட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் தமது ஹீரோவைக் காண உறவுகளும் ஊரவர்களும் பெரும் எண்ணிக்கையில் அங்கு கூடி இருந்தனர்.
அணுர அங்கு பேசும் போது நாம் எப்படியும் உள்ளாட்சித் தேர்தலை மக்களுக்குப் பெற்றுத் தருவோம். (அப்போது தேர்தல் அறிவிப்பு வந்திருக்கவில்லை.) அதில் நீங்கள் எம்மை வெற்றி பெறச் செய்தால் நிச்சயமாக நாம் மூன்றே மாதங்களில் நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்போம்.
கள்வர்களையும் மோசடிக்காரர்களையும் விரட்டியடிப்போம் என்று சவால் விட்டிருக்கின்றார். எங்களால் மட்டுமே இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதனையும் அவர் அங்கு வழியுறுத்தி இருந்தார்.
நன்றி: 08.01.2023 ஞாயிறு தினக்குரல்