ஜீ.ஆர்-ரணில் பஞ்சாயத்து!

-நஜீப்-

ரணில் நாட்டில் 26வது பிரதமராக பதவியேற்றிருக்கின்றார். தனிப்பட்ட முறையில் அவர் ஆறாவது முறையாகவும் அந்தப் பதவிக்கு வருகின்றார்.

தென் இந்தியத் திரைப் படங்களில் வருவது போல நமது நாட்டிலும் சில நிருவனங்கள் காட்டுப் பஞ்சாயத்துப் பாணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அது போலதான் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் ரணில் ஆட்சி  இருக்கும் என்பதனை கடந்த கால அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து நாம் ஊகிக்க முடிகின்றது.

உலகம் தொழிநுட்ப ரீதியில் இன்று வளர்ந்து விட்டது. இதனை நமது இளைய தலைமுறை இந்தப் போராட்டத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களை சிறு குழந்தைகள் என்று முன்னாள் பிரதமர் மஹிந்த கூறி இருந்தார். அந்தப் பச்சைக் குழந்தைகளுக்கு பயந்து இன்று சக்கரவர்த்தி போல இருந்த ராஜாபக்ஸாவும் அவர்களது கூட்டமும் ஓடிப்போய் தலைமறைவு வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கின்றன.

நன்றி: 25.05.202 ஞாயிறு தினக்குரல்

Previous Story

நாடுபடும் பாடு: நாய்க்குட்டியை தேடும் மஹிந்த

Next Story

Go Home Gota: வன்முறை பொலிஸ்மா அதிபருக்கு பறந்த உத்தரவு! சிக்கவுள்ள முக்கிய புள்ளிகள்