ஜாமியுல் அஸ்ஹர் குருளை சாரணர்

மத்திய மாகாணம் -வத்தேகம வலய ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி  முதல்வர் M.A.M.தானுஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, குருளை சாரணர்   கிராமத்தில் உள்ள பொது இடங்களை பார்வையிட்டதுடன். உடத்தலவின்னை பொது வைத்தியசாலை வளாகத்தை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.

கல்லூரியில் குருளை சாரணியம் உருவாகக் காரணமாக இருந்தவர்  சர்வதேச விவகாரங்கள் மற்றும் கண்டி மாவட்ட சாரணர் இயக்க அபிவிருத்தி தலைவி  M.F. ஷிபாயா ஆசிரியை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பங்கு கொண்ட .M.S.M. நவ்ஷாட் ஆசிரியர், M.F.சுஹாரா ஆசிரியை, S.M.F.நுஸ்பா ஆசிரியை குருளை சாரணர்களுடன்  வைத்தியர் நிலந்தி அபேகுனவர்தனவுடன் இங்கு காணப்படுகின்றானர்.

Previous Story

வாராந்த அரசியல் 07.07.2024

Next Story

தேசிய  அணியில் கலகெதர ஜப்பார் மாணவன் M.R.M.Afaaz