சுசில் ஓவர் எக்டிங்!

-நஜீப்-

சுசில் பதவி பறிப்புப் பற்றி சர்ச்சைக்குரிய திஸ்ஸகுட்டியாரச்சி இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார். உளவுத் துறையினர் கொடுத்த தகவல்படிதான் ஜனாதிபதி பதவியைப் பறித்திருக்கின்றாராம்.

பிரதமர் எம்.ஆருக்குக் கூட மனைவி சிரந்தி சொல்லித்தான் கதை தெரிய வந்ததாம். உடனே அவர் சுசிலைத் தொடர்பு கொண்டு கவலையைப் பகிர்ந்திருக்கின்றார். ஆனால் இந்த சுசிலுக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சு ஒரு கனதியான அமைச்சு அல்ல.

அந்த பதவியில் அவர் திருப்தியுடன் இருக்கவும் இல்லை. அரசியலில் இவையெல்லாம் குறும் செய்திகளேயன்றி வேறில்லை. ஆனால் இதில் அமைச்சு பறிக்கப்பட்டதை தான், எஸ்.எம்.எஸ். செய்தி மூலம்தான் பார்த்ததாகவும் சுசிலே கூறி வருகின்றார்.

ஆனால் இதில் பெரிய நாடகம் என்னவென்றால் பதவி பறிக்கப்பட்டவர் தனக்கு எந்த வசதிகளும் இல்லாதவர் போல திரீவில் ஏறிப் போனது மிகைப்பட்ட நடிப்பு என்பது எமது கணக்கு! அவர் பிரபல சட்டத்தரணி பல ஆண்டுகள் முக்கிய அமைச்சுக்களை வகித்தவர் அல்வா.!

-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022

Previous Story

ஆப்கானில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறகு  மீட்பு

Next Story

சீன -இலங்கை பேச்சுவார்த்தை