சித்தப்பாவ ஏமாத்திட்டாங்க டோ!

-நஜீப்-

சேதனப் பசளை விவகாரத்தில் ஜனாதிபதி சித்தப்பாவை அதிகாரிகள் ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் உரிய முறையில் காரியம் பார்க்கத் தவறியதால்தான் அந்த விடயத்தில் சித்தப்பா தலையிட வேண்டி வந்தது. இப்படி பேசி இருக்கின்றார் விளையாட்டுக்கார அமைச்சர் நாமல்.

பத்து வருடங்களில் செய்ய வேண்டிய வேலையை ஒரு வருடத்துக்குள் சுருக்கியதால்தான் நெருக்கடி நிலை வந்தது என்று இப்போது பந்தை அதிகாரிகள் பக்கம் வீசி இருக்கின்றார் ஆட்டக்கார அமைச்சர். இது முன்கூட்டி எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்திதான்.

பசளை விடயத்தில் சில அதிகாரிகள் விரட்டியக்கப்பட்டிருந்தார்கள். இன்னும் சிலர் ஓட்டம் எடுத்திருந்தார்கள் என்பதும் தெரிந்ததே! அத்துடன் ஜனாதிபதி தான் அரசாங்த்தை பாரம் எடுத்த பின்னர் ஒரு சதம் கூட கடன் வாங்கவில்லை என்று கூறி இருந்தார். ஆனால் அவர் காலத்தில் வாங்கிய கடன் பட்டியல் தற்போது வெளி வந்திருக்கின்றது.

-நன்றி ஞாயிறு தினக்குரல் 16.01.2022

Previous Story

சுதத்த திலகசிறி CIDக்கு

Next Story

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் விரிவுரையாளர்-OUT