சனல் 4:  சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை ஆரம்பம்

சனல் 4 காணொளி தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் சனல் 4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த படத் தொகுப்பில் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

சனல் 4வின் ஆவணப்படம்: சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை ஆரம்பம் | Channel 4 Easter Attack Suresh Salai Investigation

இந்த நிலையில் தன்னை சங்கடப்படுத்தும் வகையில் சனல் 4 இந்த காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்தில் சுரேஷ் சலே முறைப்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகள் ஆரம்பம்

இவ்வாறான சூழலில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது என சுரேஷ் சலேயின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த காணொளியை வெளியிடுவதற்கு முன், ஆகஸ்ட் 7ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக வினவியதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4வின் ஆவணப்படம்: சுரேஷ் சலேவின் முறைப்பாட்டையடுத்து விசாரணை ஆரம்பம் | Channel 4 Easter Attack Suresh Salai Investigation

 

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் மறுப்பதாகவும், அந்த காலப்பகுதியில் தான் இலங்கையில் தங்கியிருக்கவில்லை என்றும் சுரேஷ் சலே சனல் 4 இற்கு அடுத்த நாளே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி பசன் வீரசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Story

சேனல் 4 குற்றவாளிகளைத் தோலுறித்ததா?

Next Story

சேனல் 4 : ஆசாத் மௌலானா யார்?