விமானப்படை மூலம் நேரடி தாக்குதலை, ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வந்த நிலையில், ஈரான் வெறித்தனமாக பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், தாக்குதல் வியூகத்தை மாற்ற வேண்டும் என்று டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான தகவல்களை ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கிறது. ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு போர் விமானங்கள் (F-15E மற்றும் A-10) சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து,
அமெரிக்கா தனது வியூகத்தை மாற்றியுள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்திருக்கிறது. அதன்படி, இனி நேரடி விமானத் தாக்குதல்களைக் குறைத்துக்கொண்டு, நீண்ட தூரத்திலிருந்து இலக்குகளைத் தாக்கும் JASSM-ER ரக ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
JASSM-ER ஏவுகணையின் வலிமை: இந்த ஏவுகணைகள் சுமார் 965 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. எதிரி நாட்டு வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழையாமலேயே, பாதுகாப்பான தூரத்திலிருந்து இவற்றை ஏவ முடியும்.
ஒரு ஏவுகணையின் மதிப்பு சுமார் 1.5 மில்லியன் டாலர்கள் (IN.RS மதிப்பில் சுமார் 12.5. – SL.RS மதிப்பில் 42.3 கோடி). அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் தீர்ந்து வரும் ஆயுதக் கிடங்கு அமெரிக்கா இந்தப் போருக்காகத் தனது உலகளாவிய ஆயுத இருப்பைப் பயன்படுத்தி வருகிறது. போருக்கு முன்பு அமெரிக்காவிடம் 2,300 JASSM-ER ஏவுகணைகள் இருந்தன.
கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கக் கிடங்குகளில் இனி வெறும் 425 ஏவுகணைகள் மட்டுமே மிஞ்சியிருக்கும் எனத் தெரிகிறது. இந்த ஏவுகணைகளை மீண்டும் உற்பத்தி செய்து இருப்பு வைக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது சீனா போன்ற பிற நாடுகளுடனான எதிர்கால மோதல்களில் அமெரிக்காவிற்குப் பலவீனத்தை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) தகவல்படி, இதுவரை ஈரானில் உள்ள 12,300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் கடற்படை கப்பல்கள், ஏவுகணை தளங்கள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தி நிலையங்கள் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை கற்காலத்திற்கு அனுப்பும் வகையில் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். எனவே ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்க ராணுவம் இருக்கிறது.
காரணம் என்ன? அமெரிக்கா வான்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறினாலும், ஈரான் சில அதிர்ச்சிகரமான பதிலடிகளைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் ஒரு F-15E போர் விமானம் மற்றும் ஒரு A-10 தாக்குதல் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் போரின் தொடக்கத்திலிருந்து 12-க்கும் மேற்பட்ட MQ-9 ரீப்பர் ட்ரோன்களை ஈரான் அழித்துள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் கொரியாவில் இருந்த THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாகத்தான் தற்போது அமெரிக்கா தனது வியூகத்தை மாற்றியிருக்கிறது.





