சஜித் 57 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றியாம்!

ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றாhகள். சில தினங்களுக்கு முன்னர் தலைவர் சஜித் நடாத்திய கூட்டத்தை விட்டு வெளியே வந்தவர் சொன்ன கணிப்புக்களை இப்போது பார்ப்போம்.

புட்நோட் சுஜீவ கணக்குப்படி சஜித் 72 இலட்சம் வாக்குகளையும் அணுர ரணில் தம்மிக்க  ஆகிய மூன்று பேரும் தலா 15 இலட்சம் வாக்குகள் விகிதம் பொறுவார்களாம்! அப்போ புட்நோட் கருத்தப்படி சஜித் 57 இலட்சம் அதிகப் படியான வாக்குகளினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்.!

குருனாகல-அசோக்க அபேசிங்ஹ,  நமது தலைவர் 70 இலட்சம் வாக்குகளபைப் பெறுவர். இரண்டாம் இடத்திற்கு வரும் அணுர எம்மைவிட 20 இலட்சம் வாக்குகள் குறைவாகப் பெறுவார் என்றும் குறிப்பிடுகின்றார். அப்படியானால் அணுர 50 இலட்சம் வாக்குகளைப் பெறுகின்றார் என்று அந்தக் கணக்கில் தெரிய வருகின்றது.

கபீர் ஹசீம் பேசும் போது நாம் தம்மட்டம் அடிக்கக் கூடாது. எங்களுக்கு போட்டி இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டுதான் நாம் வேலை செய்ய வேண்டும் என்று கணக்குச் சொல்வதைத் தவிர்த்தக் கொண்டார். இந்த கதைகளின்படி அதித நம்பிக்கைகளைக் கொடுத்து தலைவர் சஜித்தை இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பது தெளிவாகின்றது.

நன்றி கார்டியன் நியூஸ் (8) 07.08.2024

Previous Story

சதி வேலைகள் செய்து தேர்தல் குழப்பப்படலாம் -எச்சரிக்கை

Next Story

ஜனாதிபதி வேட்பாளர்கள் அணுரவும் சஜிதும் தான்