சஜிதுக்கும் கனவு காணலாம்.!

-நஜீப்-

சில தினங்களுககு முன்னர் சுமந்திரனிடம் ஊடகவிலாளர் ஒருவர், நீங்களும் சம்பந்தனும் தமிழ் மக்களின் வாக்குகளை சஜித்துக்குப் பெற்றுக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கின்றார். அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டதற்கு சஜித்துக்கு கனவு காண்கின்ற உரிமை இருக்கின்றது.

ஆனால் நாங்கள் ஏனையோருடன் பேசித் தான் எந்த ஒரு தீர்மானத்துக்கும் வருவோம் என்று பதில் கொடுத்திருக்கின்றார். அதே நேரம் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமது தரப்பில் ஒரு பொது வேட்பாளர் என்று விடயத்தில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.

இன்னும் ஒரு தரப்பினர் தேர்தல் பகிஸ்கரிப்பு என்று நிற்க்கின்றார்கள். சரி எதிர்பார்ப்பது போல தமிழர் வாக்குகளை சஜித் பெற்றுக் கொள்ள விரும்பினால் அவர் தமிழ் மக்களுக்கு என்னதான் மாற்றிடாகத் தரப்போகின்றார் என்று கேட்கத் தோன்றுகின்து.

கடைசி நிமிடம் வரை சம்பந்தன் தரப்பை ஏமாற்றியே ரணில் காலத்தை ஓட்டினார். ஐயாவும் அவர் கதையை நம்பி தமிழர்களுக்கு கானல் நீரைக் காட்டிக் கொண்டிருந்தார். இப்போது எல்லோரும் சந்தியில்.

நன்றி: 09.06.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அரசியல் அரங்கில் மங்களான காட்சிகள்!

Next Story

சாகர ரணிலை நிராகரிக்கிறார்.!