கோட்டா பிரதமராகும் கதை!

-நஜீப்-

மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய கோட்டா நாட்டுக்கு வருகின்ற கதை முன்பை விட பலமாக அடிபடுகின்றது. ஒருவேளை இந்த குறிப்பு அச்சுக்குப் போகின்ற நேரம் அவர் நாட்டில் வந்திறங்கி இருக்கவும் இடமிருக்கின்றது.  அமெரிக்கவுக்கு போக எடுத்த முயற்ச்சிகள் கைகூடாமல் போக மீண்டும் அவர் நாட்டுக்கு வருகின்றார்.

அவர் வருகையை ஜனாதிபதி ரணில் ஜீரணித்துக் கொள்ள சிறமப்படுகின்றார் என்பது மிகத் தெளிவு. கோட்டா பெங்கொக்கில் வீட்டுக்காவலில் இருப்பது போல ஒரு நிலையில்தான் இருந்து வருகின்றார். அவருக்க அங்கு சுதந்திரமாக நடமாட கூடாது என்று அந்த அரசு கட்டளை போட்டிருந்ததாகவும் செய்திகள் ஏற்கெனவே நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

அங்கு தங்கி இருக்க பெருந் தொகை பணத்தை செலவு செய்ய வேண்டி இருப்பதும்> முன்பு போல அவரது நண்பர்கள் அவருக்கான செலவுகளை ஏற்கும் நிலையில் இல்லை.

தொலைபேசியல் அவர்களுடன் கோட்டா தொடர்பு கொண்டாலும் கூட அவர்கள் அழைப்பை தவிர்த்து வருகின்றார். இந்தப் பின்னணியில்தான் வருகை என்று கதை. வருபவருக்கு பிரதமர் பதவி என்று கதையும் சொல்லப்படுகின்றது.

நன்றி: 04.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கோட்டா வரவு போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

Next Story

குயில் முட்டையும் பணமும்!