கோட்டாபயவுக்கு ஆதரவளித்தமைக்காக மன்னிப்புக் கோருகிறேன்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்த நபர் என்ற வகையில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Former Army Commander Daya Ratnayake joins SJB

கோட்டாபய ராஜபக்ச கடந்த காலங்களில் தம்மை திறமையானவர் என நிரூபித்திருந்த போதிலும் ஜனாதிபதியான பின்னர் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கோட்டாபய ராஜபக்சவை திருடன் அல்லது மோசடி செய்பவர் என தாம் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் ஒதுங்கி நிற்காமல், பொறுப்புகளை ஏற்று நாடாளுமன்றம் சென்று நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

ரணிலின் அழைப்பை அடியோடு நிராகரித்த அநுரகுமார

Next Story

அணுரா அதிரடி இந்தியா விஜயம்!