கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் சமையலறைக்கு பின்புறமாக, விறகு அடுப்புகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான குறித்த ஹோட்டலில், விறகுகளைக் கொண்டே சமைக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்தே, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்குள்ளும் விறகு அடுப்புகள் செல்வாக்கு செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.