கொரியா விபத்தில் மரணமானவர் ஜனாசா இலங்கை வருகின்றது

ஜனாஸா
03.11.2022
வியாழக் கிழமை
அதிகாலை 4.25க்கு
கட்டுநாயக்காவை வந்தடையும்

சில தினங்களுக்கு முன்னர் அகல மரணமான மொஹம்மட் ஜீனாத் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது. கொரியாவிலுள்ள அவரது நண்பர்கள் சகாக்கள் ஊரவர்கள் நெருக்கமானவர்கள் பெற்றோர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஏற்பாட்டை அங்கு முன்னின்று கவனித்து வருகின்றார்கள்.

ஒரு மையத்துகான அனைத்தக் கடமைகளையும் அவர்கள் அங்கும் செய்திருக்கின்றார்கள். ஜனாசாவை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் முன்னர் அவர்கள் அதற்கான  தொழுகையை அங்கும் நடாத்தி இருக்கின்றனர். இலங்கைக்கு அனுப்பத் தயாராக இருக்கும் அன்னாரின் ஜனாசா.

இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் உறுதி செய்கின்றார்.

தனது G-1 வகை கடவுச்சீட்டு  கலாவதியாவதால் அது தொடர்பாக சட்டத்தரணியை சந்திக்கப் போன இடத்தில் இவர் இந்த துயரச் சம்பவத்திற்கு ஆளாகி இருந்தார்.

இவர் உடதலவின்ன ஜீ.ஐ. முனவ்வர் என்பரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

தென் அமெரிக்காவில் வலிமையடையும் இடதுசாரிகள் 

Next Story

டலஸ்..... அநீதி!