கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு பிணை

காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று அதிகாலை கோட்டா கோ கம போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அகற்றும் படையினரின் நடவடிக்கையின் போது இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் மீது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம், கடமைக்கு இடையூறு விளைவித்தல், சட்டவிரோத ஒன்றுகூடல் பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல அனுமதி | Srilanka Protest Against Government

 

Previous Story

கதைவிடும் சஜித் செயலாளர்!

Next Story

அவமானம்!