-நஜீப்-
உலக வரலாற்றில் தம்மை வங்குரோத்து நாடுகள் என்று இதுவரை அறிவித்துக் கொண்ட நாடுகள் வெரும் ஏழு நாடுகள் மட்டுமே. கடந்த வியாழன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கண்டி மாவட்ட சஜித் தரப்பு உறுப்பினர் லக்ஷ;மன் கிரியெல்ல இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இது வரை இப்படியாக கடந்த நூறு வருடங்களில் தம்மை வங்குரோத்துக் காரர்கள் என்று அறிவித்துக் கொண்ட நாடுகள் ஏழு மட்மே. அந்த வரிசையில் இலங்கையையும் ஆட்சியாளர்கள் அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கின்றார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இப்படிச் சொல்லித்தான் தற்போதய ஆட்சியாளர்கள் மக்களுக்குச் சோறு போட முனைகின்றார்கள் போலும். இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர் நோக்குவதால் ஐ.நா. நமக்கு சாப்பாடு போட காசு சேர்த்துக் கொண்டிருக்கின்றது.
நமது கல்வி அமைச்சர் சுசிலும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச் சாப்பாடு பற்றிய ஒரு கதையை சொல்லிக் கொண்டு வருகின்றார். இது கூட அந்தக் காசிலிருந்து வரும் சோறோ என்னவோ தெரியாது!
நன்றி:20.11.2022ஞாயிறு தினக்குரல்