–நஜீப்–
என்னதான் கொரோனா கொடிகட்டிப் பறந்து பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்த நாடுகள் கூட கொரோனாவின் பிடியில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டது. நமது பக்கத்துச் சின்னச் சின்ன நாடுகள் கூட அதிலிருந்து மீண்டு வந்திருக்கின்றது.
இன்னும் கொரோனா முற்றும் முழுதாக உலகைத் தனது பிடியில் இருந்து விடுவிக்காவிட்டாலும். தலைவர்கள் கொரோனாவைக் காரணம் சொல்லித் தப்பித்துக் கொள்ள முனையவில்லை. ஆனால் நமது நாட்டில் ஆளும் தரப்பிலுள்ள அனைத்துப் பேரும் கொரோனாவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அரசைக் காப்பாற்றி வருகின்றனர்.
நமது ஜனாதிபதியும் கூட கொரோனாவைத் தான் பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக சொல்லிக் கொண்டு வருகின்றார். இந்தக் காட்சிகளை நாம் இங்குதான் பார்க்க முடியும்.
கொரோனா துவங்கிய சீனா, நமது பக்கத்து இந்தியா, பங்களதேச ஏன் மாலைதீவு கூட கொரோனாவை காரணம் சொல்லவுமில்லை தனது பொருளாதாரத்தை சீரழித்துக் கொள்ளவுமில்லை.
நன்றி: ஞாயிறு தினக்குரல் 20.03.2022