-நஜீப்-
நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்
தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற ஜனாதிபதி அனுரவின் கட்சியின் கோட்பாதர்தான் றோஹன விஜேவீர. அவர் மகன்தான் உவிந்து விஜேவீர. இவரும் தந்தையைப் போலவே ரஸ்யாவில் பட்டம் படித்தவர். இரண்டாம் தலைமுறை என்ற அமைப்பு ஊடாக அவரும் தற்போது அரசியல் பிரவேசம் எடுத்திருக்கின்றார்.
அண்மையில் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட எம்பிலிபிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அவர் தனது அணியை நிறுத்தி இருக்கின்றார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் தனது அணியை நாடுபூரவும் நிறுத்த இருப்பதாகக் கூறுகின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை அனுரவுக்கு எதிராக களமிறக்கி என்பிபி. வாக்குகளைச் சிதறடிக்க பலர் முயன்றாலும் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்தத் தேர்தலில் தான் என்பிபி.க்கு எதிராக எந்தவொரு செயல்பாடுகளிலும் ஈடுபடப் போவதில்லை என்றும் அவர் கூறி அதன்படியே நடந்து கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.