இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் சில நாட்களாக பல்வேறு இடங்களில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி, மஹிந்த மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மக்களால் முற்றுகையிடப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் HMM.ஹரீஸ் (H. M. M. Harees) அவர்களின் அலுவலகமும் மக்களின் போராட்ட பேரணியால் முற்றுகையிடப்பட்டது.