-நஜீப்-
சிங்களத் தமிழ் புத்தாண்டுகள் துவக்கத்தில் நமது நாட்டில் பேரினக் கடும் போக்காளர்கள் கருத்தடைக் கொத்து, கருத்தடை உள்ளாடைகள், முஸ்லிம் வர்த்த நிலையப் பகிஸ்கரிப்புப் பற்றிக் கோஷங்களை எழுப்புவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி ஒருவர் கூட வாய்திறக்காமல் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் இருக்கின்றார்கள்.
இது ஏனோ தெரியவில்லை.! 4000 ம் பேர்வரையிலான பேரின பெண்களுக்கு பலாத்காரக் கருத்தடை செய்த குற்றச்சாட்டில் இருந்து டாக்டர் ஷாபி குற்றமற்றவர் என்று நீதி மன்றம் தீர்ப்பு. இதுவரை அவருக்கு வழங்க வேண்டிய பாக்கி சம்பளத்தை அரசு உடனடியாக வாழங்க வேண்டும் என்றும் கண்டிப்பான கட்டளை.
குற்றச்சாட்டுக்கள் எல்லாமே கடந்த காலங்களில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட அரசியல் நாடகங்கள் என்பது பேரினத்தாருக்கும் நன்றாகத் தெளிவாகி இருக்கின்றது.
அதே போன்று ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் ஒரு போதும் கண்டறியப்பட வாய்புக்கள் இல்லை. இதனை நாம் துவக்கத்தில் இருந்தே பேராயருக்குச் சொல்லி வந்திருக்கின்றோம். புதிய நாடகங்கள் ஏதும் வருமா பொறுத்துப் பார்ப்போம்!
நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.03.2022