ஒரே நாடு ஒரே சட்டம்!

-நஜீப்-

ஒரே நாடு ஒரு சட்டம் என்றெல்லாம் பேசிக் கொண்டும் அது பற்றிய கருத்துக் கேட்டுத் திரிந்து கொண்டிருந்ததே ஒரு கூட்டம். ஞானத்தார் தலைமையிலான அவர்கள் பணிகள் எல்லாம் இப்போது முற்றுப் பெற்றிருக்கும் தானே!

எப்போது  ஒரு நாடு ஒரு சட்டம் அமுலுக்கு வரப்போகின்றது என்பதனை குடியானவன் என்ற வகையில் தெரிந்து கொள்வதில் நாம் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றோம்.

எப்போது ராஜாக்கள் சட்டப் புத்தகம் வெளியிட்டு வைக்கின்ற விழா நடாத்தப் போகின்றார்கள்? ஒரு நாடு ஒரு சட்டம் அமுலுக்கு வர இருக்கின்ற நாட்டில் இப்படியும் ஒரு சம்பவம் நடந்திருக்கின்றது பாருங்கள்.

ரம்புக்கனை சம்பவத்தில்  சூடுவதற்கு கட்டளை போட்டவர், தான் படிக்காத ஒரு பாடசாலையில் ஓ.எல் சித்தியடைந்ததாக மோசடி செய்துதான் பதவி பெற்றிருக்கின்றார்.

இவர் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி நெவிலின் நெருங்கிய உறவினராம். அதனால்தான் ஒரு நாடு ஒரு சட்டத்தில் எஸ்.எஸ்.பி.க்கு இன்றுவரை விஐபி சலுகையாம்!

நன்றி: 01.05.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாண் 400 ரூபா-நாமல்

Next Story

தேர்தல்-யாப்புக் கனவுகள்!