ஒரு வருடம் தாருங்கள்!

-நஜீப்-

பீ.ஆர்.நிதி அமைச்சர் பதவிக்கு வந்ததும் நாட்டில் இன்று இருக்கின்ற எல்லா நெருக்கடிகளுக்கும் தீர்வு. ஆளுக்கு ஏழு தலைகள் என்றவர்கள் இன்று வாயடைத்து நிற்க்கின்றார்கள். இந்த நிலையில் அந்த ஏழு தலைக்காரர் தற்போது புதுக் கதை சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்.

ஆளும் தரப்பு பின்வரிசை நாடாளுமன்றப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டபோது, எனக்கு இன்னும் ஒரு வருடங்கள் தாருங்கள். நான் எல்லா நெருக்கடிகளில் இருந்தும் நாட்டை விடுவித்துத் தருகின்றேன் என்று அங்கு சொல்லி இருக்கின்றது ஏழு தலை.

இன்று ஒரு பொழுதை ஓட்டுவதற்கே மக்கள் திண்டாடும் போது இன்னும் ஒரு வருடத்துக்கு இதே நிலைதான் என்பது ஒரு வருடக் கதையில் இருந்து புரிகின்றது.

ஆனால் இன்னும் நூறுவருடங்கள் இருந்தாலும் ஏழு தலையால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று யார்தான் நம்பப் போகின்றார்கள். ஆளும் தரப்பிலுள்ளவர்களே ஆளை விரட்டினால்தான் நாட்டுக்கு மீட்சி என இன்று பேசி வருகின்றார்கள்.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 13.03.2022

Previous Story

அரிசி கிலோ 300 ரூபா! பொருளாதார நிபுணர் தகவல்

Next Story

யுக்ரேனில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு