எக்னலிகொட மனைவி தலைமுடி காணிக்கை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அவர் காளி கோவிலில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.

இதேவேளை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

யார் பட்ட கடன் இது !

Next Story

தங்கம் வென்ற கண்டி - ஹுலுகங்கை சாதீர்