ஓடிப்போன ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாடு திரும்புவது பற்றி பரவலாக பேச்சு. அந்த கதையில் நிறையவே உண்மைகள் இருக்கின்றன. நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஓடிப் போனவரிடம் கேட்டுத்தான் ஜனாதிபதி ரணில் முக்கிய தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்.
அரசுக்கு எதிரான போராட்டங்களை முடக்குவது பற்றிய கட்டளைகள் அங்கிருந்துதான் வருகின்றன. முன்னாள் பிரதமர் எம்.ஆரும் சில விடயங்களில் அழுத்தங்கைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த நிலையில் அவர் நாட்டுக்கு வந்து விட்டால் ரணில் கதிரையில் இருக்க கட்டளைகளை கோட்டாவே பிறப்பிப்பார் என்ற அச்சம் ரணிலுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
இதனால்தான் தற்போதய நிலையில் அவர் இங்கு வருவது பொறுத்தமில்லை என்று ரணில் வெளிப்படையாகவே கூறி இருக்கின்றார்.
கோட்டா மீண்டும் நாட்டுக்கு வரும் போது அவரை பெரும் ஊர்வலத்துடன் அழைத்து வரவும் சிலர் ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது.
இது தவிர ஆளும் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்களும் ஜனாதிபதி ரணிலுக்கு நிறையவே உரிமையுடன் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.