உளவுத் துறை கண்டுபிடிப்பு!

-நஜீப்-

கடந்த சில தினங்களாக கொழும்பு சுற்றுவட்டாரம் இராணுவ மயப்படுத்தப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பாக ஆளும் தரப்பில் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் இராணுவத் தலைமை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முரண்பாடான செய்திகளைச் சொல்லி மூக்குடைபட்டிருந்தனர்.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் மகிந்தவிற்கு நெருக்கமானவரா..! | Pastor Jerome Fernando

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று தேடிப் பார்த்தால் குறிப்பிட்ட தினத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளி மாணவர்களுக்கான ஒரு செயலமர்வு ஏற்பாடாகி இருக்கின்றது. அதற்கு 600 வரையிலான மாணவர்கள் எதிர்பார்க்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது பெற்றோர் உறவுகளுடன் அதற்கு வருகை தரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் 1500 வரையிலான உணவுப் பொதிகளை அங்குள்ள சிற்றுண்டிச்சாலை ஏற்பாடு செய்திருக்கின்றது.

இதனைப் பார்த்த அங்குள்ள அரச உளவாளிகள் ஏதோ போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுதான் இது என்று கணக்கப் போட்டு மேல் இடத்துக்கு செய்தியை மூட்டிவிட, அரசுக்கு எதிரான சதி என்று இதற்கு பேர் வைத்து நடந்த தடுப்பு ஏற்பாடுகள்தான் இது என்று பின்னர் தெரிய வந்திருக்கின்றது. எப்படி நமது உளவுத்துறை கண்டு பிடிப்பு!

நன்றி: 21.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மாடர்ன் லவ் சென்னை: - விமர்சனம்

Next Story

கொழும்பில் பிரபல நடிகை வீட்டில்  பெண்ணின் மரணத்தில் மர்மம்