தற்போது நாடுபூராவிலும் பாடசாலைகளுக்கிடையிலான 2023க் கான கல்வி வலய மட்டப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கண்டி-வத்தேகம கல்வி வலயப் போட்டிகள் திகன மத்திய மாகாண விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில் 13 வயதுக்குட்பட்ட உயரப் பாய்தல் பிரிவுப் போட்டியில் உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி மாணவன் சாமித் அகமட் சம்பியனாகத் தெரிவாகி இருக்கின்றார். அதே பிரிவு உயரப் பாய்தல் போட்டியில் மூன்றம் இடத்தை அதே கல்லூரி மாணவன் அபுல் கலாம் சிஹ்லான் சுவிகரித்துக் கொண்டார்.
முப்பது வரையிலான பாடசாலைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தேசிய ரீதியில் முன்னணி வகிக்கின்ற விளையாட்டுப் பாசாலையான வலல்ல தேசிய கல்லூரி மாணவர்களும் இதில் கலந்து கொள்வதும் இங்கு அவதானிக்கத் தக்கது.
இந்த வெற்றியின் மூலம் சாமித் அகமட் மத்திய மாகாணப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.