நஜீப்
(நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல்)

எதிரணியில் 2029ல் ஜனாதிபதி வேட்பாளர்களுக்குக் கடும் போட்டி நிலவுவதை நாம் பார்க்கின்றோம். தனது அணி சார்பில் நான்தான் வேட்பாளர் என்று சஜித் ஏற்கெனவே அறிவித்திருக்கின்றார்.
மொட்டுக் கட்சி வேட்பாளர் நாமலாம். அவரை நாம் ஜனாதிபதியாக்கிவிட்டுத்தான் ஓய்வோம் என்று கட்சி சார்பில் திஸ்ஸ குட்டி மஹிந்த முன்னிலையில் சபதம் செய்திருக்கின்றது.
கைதுக்குப் பின்னர் ரணில் செல்வாக்கு அதிகரித்திருக்கின்றது. அதனால் அவர்தான் அடுத்த ஜனாதிபதி வேடபாளர் என்று ஐதேக. ஆதரவாலர்கள் கூறுகின்றார்கள்.
இதற்கிடையில் டட்லி சிரிசேனவும் ஒரு வேட்பாளர் என்றும் கதைகள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் 2029ல் ஜனாதிபதி தேர்தலே கிடையாது என்றும் செய்திகள்.
புதிய அரசியல் யாப்பு வரும் போது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி என்பது கிடையாது. புதிய யாப்பில் பொம்மை ஜனாதிபதி ஒருவர்தான் இருப்பாராம்.





