இம்ரான்: எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் : ஏப். 3-ல்

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது, ஓட்டெடுப்பு ஏப். 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், அவர் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.

இவரது ஆட்சி நிர்வாகத்தில் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கு, ‘இம்ரான் கானின் கொள்கைகளே காரணம்’ என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இம்ரான் கானுக்கு எதிராக, அவை நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று (மார்ச்.28) ல் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்தார். மார்ச் 31-ம் தேதி தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏப். 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே தீர்மானம் நிறைவேறிவிடும்.அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேரிடும்.

ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.இந்நிலையில், தீர்மானத்தை ஏற்பதற்கான ஓட்டெடுப்பில், 161 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதனால், இம்ரான் கான் பதவியில் நீடிப்பது இழுபறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Story

மனம் கலங்கி விட்ட - இந்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உருக்கம்

Next Story

இங்கு பந்து பட்டால் ரூ.5 லட்சம்.!