இன்று பிற்பகல் முதல் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் 1 மணி 45 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே எரிபொருள் பற்றாக் குறை காரணமாக களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Previous Story

மனித உரிமை மீறல் ராஜபக்சே மறுப்பு...!

Next Story

தேவாலய கை குண்டு : சந்தேநபர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!