ஆப்கானிஸ்தானின் ஹீராட் மாகாணத்தில் பிரசித்தி பெற்ற குஷார்காக் மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் நடைபெற்ற தொழுகையின் போது திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மசூதியின் தலைமை மத குரு முஜிப் உல் -ரஹ்மான் அன்சாரி உள்பட 20 பேர் பலியாயினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.





