-நஜீப்-
மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார அண்மையில் ஒரு ஊடகச் சந்திப்பில் பேசினார். தனிப்பட்ட நிகழ்சி நிரலுக்காக செயல்படுகின்றவர்களுக்கு இதன் பின்னர் கட்சியில் இடமில்லை. சு.கட்சி தயாசிரி இதற்கு நல்லதொரு உதாரணம்.
அரசுக்கு நாம் நிபந்தனை அற்ற வகையில் ஒத்துழைக்க வேண்டும். அதற்காக நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் பண்ண முடியாது. அஸ்வெஸ்ம திட்டத்தினால் இந்த நாட்டில் ஒருபோதும் வறுமையை ஒழிக்க முடியாது.
அது வெற்றி பெறவும் மாட்டது. நாங்கள் பொது வேலைத் திட்டத்துடன் செயலாற்ற வேண்டும். அதன்போது மக்கள் நலனுக்காக அரசுடன் மோத வேண்டி வரும். ‘நாங்கள்தான் நல்லாதைச் செய்தோம்’ என்று சிலர் கதைக்கின்றார்கள். இன்று நாங்கள் வெளிநாட்டுக் கடன்களைக் கொடுக்காமல் பொருளாதார வெற்றி என்று அதனை நினைக்கின்றோம்.
அதனை நாம் கொடுக்கத் துவங்கும் போது யதார்த்தம் புரியும். அவரது உரையானது நேரடியாக ஜனாதிபதி ரணிலுக்குக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்க வேண்டும். இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அணுரகுமார கூட்டங்களில் பேசுவது போல் அல்லவா இருக்கின்றது.!
நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்