அரசாங்க ஊழியர்க்கு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அரச சார்பு ஊழியர்களுக்கும் இக்கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுற்றுநிருபம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

Previous Story

குவைத் வைத்த ஆப்பு! விமான சேவை ரத்து!!

Next Story

முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வெறுப்பு சமூக வலைத்தளங்களில் பரவுவது எப்படி?