-நஜீப்-
பிரசன்ன ரணவீர கம்பஹ மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வந்தவர். அங்கு வந்தவர் நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் சண்டையில் மிளகாய்தூள் எரிந்து ஜனரஞ்சகமானவர்.
அவர் ராஜபக்ஸாக்களுக்கு மிகவும் வேண்டியவர். இந்த சண்டித்தனத்தை ஊக்கப்படுத்த அவருக்கு ராஜபக்ஸாக்கள் இராஜங்க அiமைச்சுக் கொடுத்து கௌரவப்படுத்தினார்கள்.
ஜனாதிபதி ரணில் கூட இன்று இவருக்கு இராஜங்க அமைச்சுக் கொடுத்திருக்கின்றார். இப்போது இந்த அமைச்சரின் மகன் சட்ட விரோதமாக அரச வாகனங்களையும் அடியாட்களையும் எடுத்துக் கொண்டு போய் கிரிபத்கொட நகரில் பெரும் சண்டித்தனம் பண்ணி இரு மாணவர்களை அடித்துக் காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இதனை ஒரு சின்ன விடயமாக இளவயதுக் கோலாறு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சொல்லி சமாளித்திருக்கின்றார்.
அரகலயின் போது ஜனாதிபதி வீட்டுக்குள் புகுந்த அப்பாவிகளுக்கு ஒரு நீதியும் இந்த இராஜாங்க அமைச்சரின் மகனுக்கு ஒரு நீதியும் என்றுதான் பொலிஸ் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத்தான் இதிலிருந்து அவதானிக்க முடிகின்றது.
நன்றி:02.10.2022 ஞாயிறு தினக்குரல்