அத்துரலியே  தேரர் தியானம்..!

எதிர்காலத்தில் மீண்டும் அரசியலில் ஈடுபட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் (Athuraliye Rathana Thero) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இனி வரும் காலத்தில் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட போவதில்லை எனவும் உபதேசங்களிலும் தியானங்களிலும் ஈடுபட போவதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எமது மக்கள் சக்தி கட்சியின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அத்துரலியே ரதன தேரர், தேசிய பட்டியல் மூலமாக இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அத்துரலியே ரதன தேரர், 2004 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடாக முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அத்துரலியே ரதன தேரர் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார்.

Previous Story

மலையில் மாணவன் திடீர் மரணம்

Next Story

இதே வாரம் 50000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.