துருக்கியை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த எர்டோகன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள எர்டோகனின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் அங்காரா உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளையில் 5 சதவீத ஓட்டு வித்தியசாத்தியத்தில் அதிபர் பதவிக்கான வெற்றியை தவறவிட்ட துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லு, எர்டோகனின் வெற்றியை ”நியாயமில்லாத தேர்தல்” என்று விமர்சித்துள்ளார்.
வெற்றி குறித்து துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் முன் பேசிய எர்டோகன், “இது துருக்கியின் வரலாற்றில் மிக முக்கிய தேர்தல். வென்றது நாங்கள் மட்டுமல்ல, துருக்கியும் வென்றது. போய் வாருங்கள் கெமல்” என்று பேசி இருக்கிறார். மேலும், எல்ஜிபிடிகியூ மக்களையும் தனது வெற்றி உரையில் கடுமையாக எர்டோகன் விமர்சித்திருக்கிறார்.
மேலும், வெற்றிக் கொண்டாட்டத்தில் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினரான எர்ஹன் குர்த், எர்டோகன் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எர்டோகனின் வெற்றி துருக்கியின் அரசியல் கள நிலவாரத்தை முழுமையாக விவரித்திருக்கிறது. அதாவது, துருக்கி நாடாளுமன்றத் தேர்தலில் எர்டோகன் வென்றிருக்கிறார். ஆனால், துருக்கி முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியிருக்கிறது.
நிலநடுக்க பாதிப்புகளை எர்டோகன் கையாண்ட விதம், நாட்டின் பணவீக்கம் 44% -ஐ எட்டியது போன்றவை எர்டோகனின் நீண்ட கால ஆட்சிக்கும் எதிராக அதிர்வலையை அங்கு தீவிரமாக ஏற்படுத்தியது. இதையடுத்துதான், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். ஆனாலும், அதிர்வலையை மீறி எர்டோகன் வென்றிருக்கிறார்.
எனினும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த துருக்கி தற்போது இல்லை. துருக்கி அரசியல் ரீதியாக பல்வேறு மாறுதல்களை கொண்டிருக்கிறது. துருக்கியின் ஒட்டுமொத்த ஆதரவு நிலைப்பாட்டை எர்டோகன் இழந்துவிட்டார். எர்டோகனும் அரசியல் ரீதியாக மாறுதல்களை மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் இருக்கிறார்.
முந்தைய காலத்தில் தன் ஆட்சியின் மீது வைக்கப்பட்ட தீவிர விமர்சனங்களுக்கு எத்தகைய நடவடிக்கைகளை எர்டோகன் எடுக்க போகிறார், பழைமைவாத கருத்துகளிலிருந்து அகன்று எல்ஜிபிடிகியூ மக்களின் பக்கம் நிற்பாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி – சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பொருளாதார ரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்தது.
இதையடுத்துதான், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர்.
இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே கடந்த 15 ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.
துருக்கியின் அரசியல் வழக்கம்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் நேற்று மே 28-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் 99% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட சூழலில் எர்டோகன் 52% வாக்குகளும் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இது அதிகாரபூர்வ தகவல். இந்நிலையில் துருக்கி தேர்தல் ஆணையமும் எர்டோகன் வெற்றியை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு அதில் கெமால் நிறையா வாக்குகள் பெற்றாலும்கூட இந்த 52 சதவீதத்தை நெருங்க இயலாது என்பதால் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தன்னை நம்பி மேலும் 5 ஆண்டுகள் அளித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அதேபோல், ஏற்கெனவே 21 ஆண்டுகள் ஆட்சி செய்ததால் இப்போது மக்கள் நம்பிக்கையின் பேரில் அளித்துள்ள வாக்குகளுக்கு உரிய நன்மை செய்வேன் என்றார்.