அதிகாரப் போட்டி துவக்கம்!

-நஜீப்-

தற்போது இலங்கை அரசியலில் உயர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்றும் அதற்கு அடுத்த நிலை பதவிகள் எனவும் அவை இருக்கின்றன.

இதில் ஜனாதிபதிக்கு ரணில், சஜித், பீல்ட் மார்ஷல் பொன்சேக்க, இவர்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றுதான் பார்க்க வேண்டும். இதில் சஜித்தும் பொன்சேக்காவும் தற்போதும் ஒரே அணியில் இருக்கின்றார்கள்.

இது பற்றி பீல்ட மார்ஷலைக் கேட்டால், இது எனது தனிப்பட்ட அரசியல் உரிமை என்று கூறுகின்றார். அடுத்து மொட்டு அணியில் தனிக் குழுவாக இருக்கும் டலஸூம் போட்டிக்கு வருவதாக சொல்லப்படுகின்றது. போட்டி இல்லாது ஒருவரைத் தெரிவு செய்வதற்கும் சு.கட்சி முனைவதாக செயலாளர் தயாசிரி கூறுகின்றார்.

டலஸ்-சஜித் அணிகள் இணைந்து ரணிலுக்கு எதிராக வியூகங்களை வகுப்பதாகவும் கேள்வி. ஆனால் மொட்டு அணியினர் எதையோ காட்டினால் பிணமும் வாய்திறக்கும் என்பார்களே!

அதனை வைத்துக் காய் நகர்த்த இருப்பதாகவும் தகவல். ரணில் தலமையில் பிரதமர் பதவியை ஏற்க சஜீத்  பின்னடிப்பாம்!. புதிய அமைச்சர்கள் வேறு வர இருக்கின்றார்கள்.

நன்றி:17.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கோட்டா ஓட்டம் ரணில்  ஆட்டம்!

Next Story

'நன்றி”