ஹக்கீமுக்குப் பறந்த செய்தி!

-நஜீப்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேவிபி. தலைவர் அணுரகுமார அதிரடியான தேர்தல் பரப்புரைகளை கிழக்குப் பகுதியில் மேற்கொண்டிருந்தார். அவருக்கு போன இடமெல்லாம் முஸ்லிம் இளைஞர்களும் மூத்தவர்களும் பெரு வரவேற்புக் கொடுத்துடன் அந்தக் கூட்டங்களிலும் ஆர்வத்துடன் போய் கலந்து கொண்டும் இருந்தனர்.

இப்படியான ஒரு கூட்டம் சம்பாந்துறையிலும் நடந்தது. அதனைப் பார்த்த ஹக்கீம் விசிரிகள் அதிர்ந்து போய் கிழக்கில் ஏற்பட்டிருக்கின்ற இந்த மாற்றங்கள் தொடர்பான தகவல்களை தலைவருக்கு ஆதங்கத்துடன் தெரியப்படுத்தியபோது ஒன்றுக்கும் அச்சப்பட வேண்டாம்.

கூட்டம் கூடியது, நல்ல பேசினார் என்பதற்காக நம்மவர்கள் அவர்களுக்கு வோட்டுப் போட மாட்டார்கள். நான் வந்து நிலமையை சரி செய்து  தருகின்றேன் என்று சொல்லி தனது ஆதரவாலர்களைத் தனித்துவத்தார் சமாதனம் சொய்ததாகத் தகவல்.

வன்னித் தளபதி கிழக்கில் தோகையை விரித்த போதும் இப்படித்தான் தலைவர் ஆதரவாலர்களை சமாதனம் செய்தார். இன்று நிலமை? இப்போது  கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களிலும் செஞ்சட்டைகாரர்கள் மீது ஒரு ஈப்பு ஏற்பட்டு அங்கு சலசலப்பு நிலை என்பதுதான் யாதர்த்தம்.

நன்றி: 05.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சஜித்-தலையணை ஏன் இப்படி?

Next Story

எங்கள் பயணம் தொடரும்-சங்ககாரா!