ஹக்கீமின் புதிய கண்டுபிடிப்பு!

-நஜீப்-

அரசியலில்  தமது எதிரிகளை வீழ்த்துவதற்காக எதிர்த் தரப்பினர் கட்டுக் கதைகளை சந்தைப்படுத்துவது ஒரு சம்பிரதாய நிகழ்வுதான். அந்த வகையில் தற்போது ரணிலையும் மொட்டுக் கட்சியையும் குழப்பியடிக்கின்ற ஒரு முயற்சி அரசியல் அரங்கில் நடந்து கொண்டிருக்கின்றது.

அப்படியான ஒரு தகவலைத் தான் நாம் இப்போது உங்களுக்கு சொல்ல வருகின்றோம். ஆளும் மொட்டுக் கட்சியில் இருந்து (30-40) முப்பதற்கும் நாப்பதற்கும் இடைப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகின்ற பொதுத் தேர்தலில் ரணில் அணியுடன் இணைந்து போட்டியிட இருப்பதாக கண்டி-மகளீர் கல்லூரி நிகழ்வென்றில் மு.கா. ஹக்கீம் சொல்லி இருந்தார். ஹக்கீம் கண்டுபிடிப்புக்கு சமாந்திரமான கருத்துக்கள் பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன.

பதுளை திலான் பெரேராவும் இந்தக் கதையை சொல்லி இருந்தார்.  இது அண்டப் புளுகு. இப்படியான கதைகளை நம்பி மக்கள் தங்களை முட்டால்களாக்கிக் கொள்ளக் கூடாது. ஹக்கீம் சொன்ன நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்கின்றதா? அதுவும் ரணிலின் வங்குரோத்துக் கட்சியுடனா? ஏன் ஐயா மக்கள் தலைகளில் கொம்பு வைக்க வருகின்றீர்கள்.

நன்றி- 30.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உலக பக்கவாதம் தினம்: ''தூக்கமின்மையாலும் பாதிப்பு வரலாம்''

Next Story

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்?