வெற்றியின் இரகசியம் மகேல!

-நஜீப்-

இலங்கையில் நடக்க வேண்டி ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த போட்டியில் பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்திய அணியாக ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இருந்தது. இலங்கை அணி இந்தப் போட்டிக்கு டுபாய் நோக்கி விமானம் ஏறுகின்ற போது எந்த பெரிய எதிர்பார்ப்பும் நாட்டில் இருக்வில்லை.

ஆப்கானுடனான தோல்வி இலங்கைக்கு பெரும் அவமானத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அதனை சுதாகரித்துக் கொண்ட நமது அணி, அதன் பின்னர் அதிரடியாக தனது திறமையைக் காட்டத் துவங்கியது. இலங்கை அணி அடைந்த வெற்றியின் பின்னணியில் இருந்தவர் முன்னாள் அணித் தலைவர் மகேல ஜெயவர்தன என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது.

அணியைத் தெரிவு செய்தது முதல்   தேவையான அனைத்து ஆலோசனைகளையும் அவரே வழங்கி இருக்கின்றார். இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக இருக்கின்ற உலகக் கோப்பைக்கான போட்டியின் போது அவர் நேரடியாகவே அங்கு போய் இலங்கை அணிக்கு தனது பங்களிப்பை வழங்குவார்.

இந்த உண்மைகளை மகலே பகிரங்கப்படுத்தாவிட்டாலும் இதுதான் யதார்த்தம் எனப் பகிரங்கமாக கூறி இருக்கின்றார் அதன் முகாமையாளர்.

நன்றி: 18.09.2022 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

ரஷ்யாவில் கடும் பரபரப்பு.. புதினை கொல்ல நடந்த பகீர் முயற்சி? திடுக் தகவல்கள்

Next Story

கட்டுநாயக்க வந்த இசைஞானி இளையராஜா