-நஜீப்-
ஜேவிபி. யில் இருக்கின்ற காலத்தில் ஹீரோவாக இருந்த விமல் வீரவன்ச ராஜபக்ஸ கூடாரத்துக்குத் தாவி அதிகாரத்தில் இருந்த காலத்தில் உறவுகளுக்கு சட்ட விரோதமாக சலுகைகள் வழங்கியதும் ஐ.நா.வுக்கு எதிராக உண்ணவிரோதம் இருந்து மஹிந்த கையால் பானம் அருந்தி விரதத்தை முடித்த நகைச்சுவைகள்…,
இன்று மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேறி இதன் பின்னர் ராஜபக்ஸ அணிக்கு எனது நாய் கூடப் போகாது என்று சொன்னாவர், மனைவி சசியை ராஜபக்சாக்கள் வீட்டுக்கு முன்னாள் ஏற்பாடு செய்த வெசக் கடலை தான நிகழ்வுக்குப் அனுப்பி அதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய செய்தி அரசியல் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
இதனால் வங்ச மூக்குடைபட்டாரா? அல்லது தானது உத்தர லங்கா என்ற அரசியல் இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதால் மீண்டும் ராஜபக்ஸாக்கள் கூhரத்துக்கள் நுழையும் முன்னேற்பாடாகவும் சசியின் இந்த நல்லிணக்கப் பயணம் அமைந்திருக்க வேண்டும்.
இப்படி விமல் வீரவன்ச ஒரு பல்டிக்குத் தயாரவது பற்றிய தகவலை நாம் சில தினங்களுக்கு முன்னர் வாசகர்களுக்கச் சொல்லி இருந்தோம். அதே போன்று சஜித் கூடாரத்துக்குல் திடீரென உதய கம்மன்பிலவும் புகுந்ததால் பீல்ட் மார்ஷல் தனது கடும் எதிர்ப்பை அங்கு வெளியிட்டு வருகின்றார்.
நன்றி: 14.05.2023 ஞாயிறு தினக்குரல்