சற்றுமுன்னர்முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், நள்ளிரவு தாண்டியும் பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்போது பல முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக முற்றுகையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.