நஜீப்
நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல்
நாம் ஈரானியத் தலைவர் அலி கமெய்னியைக் கொன்று விட்டோம். அங்கே மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றும் இரண்டொரு நாட்களில் நாம் அங்கே நமக்கு சாதகமான ஒரு ஆட்சியை அமைப்போம். இது ஈரானிய ஆன்மீகத் தலைவர் குண்டு வீசி கொல்லப்பட்ட போது அமெரிக்க அதிபர் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள்.
ஆனால் ஈரான் மக்கள் மரணித்த தனது தலைவருக்கு எந்தளவு மதிப்பும் மரியாதையும் செலுத்தி வருகின்றார்கள் அவருக்கு நாட்டில் எந்தளவு செல்வாக்கு இருக்கின்றது என்பதற்கு இந்த மரண ஊர்வலத்தில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் நல்ல உதாரணம்.
இது உலக முஸ்லிம்களுக்கும் குறிப்பாக ஷPயா சமூகத்தினருக்கும் புதிய ஒரு எழுர்ச்சியை கொடுத்திருக்கின்றது. இதுவரை உலகில் நடைபெற்ற மிகப் பெரிய மரண ஊர்வலமாக இது வரலாற்றில் பதிவாகின்றது. மேலும் ஈரானியர்களின் மன வலிமைக்கு இது நல்லதொரு சான்று.




