ரயில் மோதி, தர்ஹா நகர் சிறுவன் பர்ஹான் மரணம்

தனது தந்தையுடன் தனிப்பட்ட தேவைக்காக, வெளியில் சென்ற, ஒன்பது வயதான சிறுவன், அளுத்கமவில் இருந்து கொழும்பு வரையிலும் பயணித்த ரயிலில் மோதி மரணித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

மருதானை வரையிலும் பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் நோக்கில், தந்தையும் அவருடன் இரண்டு பிள்ளைகளும் வந்துள்ளனர்.அதன் பின்னர், அவ்விரு பிள்ளைகளும் ரயில் தண்டவாளத்தில் சிறிது தூரம் பயணித்துள்ளனர். அதன்போதே, காலியில் இருந்து கல்கிஸை வரையிலும் பயணித்த ரயிலேயே சிறுவன் மோதி மரணித்துள்ளார்.

தர்ஹா நகரில் வசித்துவரும் மொஹமட் பர்ஹான் அப்துல் ரஹ்மான் (வயது 9) என்பவரே மரணித்துள்ளார்.

Previous Story

பூஸ்டர் பெற்றுக் கொள்ளவும் -சந்திம ஜீவந்தர

Next Story

குடி மக்களுக்கோர் சிவப்பு எச்சரிக்கை!