ரணில் மீது ஏன் இந்த விசுவாசம்!

-நஜீப்-

சம்பந்தன் அணி ஏன் இந்தளவு ஜனாதிபதி ரணில் மீது விசுவாசத்துடன் இருக்கின்றார்கள் என்பதும் புரியாத புதிராக இருக்கின்றது. நாம் ஏன் இப்படிச் சொல்கின்றோம் என்றால் இந்த சுதந்திர தினத்துக்குப் முன்னர் தமிழருக்கத் தீர்வைத் தருகின்றேன் என்று சொன்ன போது அது ஒரு போதும் நடக்காத காரியம் என்பதை நாம் தெளிவாக அறிந்திருந்தோம்.

அறிவித்தும் இருந்தோம். இதனால் இது நமக்கு அதிர்ச்சியான செய்தியல்ல. ஆனால் கண்ணத்தில் அடிவாங்கியது போல் மூக்குடைபட்ட சம்பந்தன் அணி ரணிலிடத்தில் ஏமாந்து போனது தொடர்ப்பில் அவர்களுக்கு எந்த ஒரு வலியும் இல்லாமல் இருப்பதும் ஆச்சர்யமாக இருக்கின்றது.

பொதுவாக ஜனாதிபதி ரணிலின் புதிய நாடாளுமன்ற அமர்வு நிகழ்வை எதிரணிகள் பகிஸ்கரித்த நேரம் அதில் சுமந்திரன் போன்றவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்தும் ரணிலுக்கு விசுவாசம் தெரிவித்து வருவது ஏதேனும் அரசியல் கொடுக்கல் வாங்களுடன் தொடர்புள்ள விடயமோ? அல்லது இந்தியாவின் ஏதாவது வகையிலான வழி நடத்தலினால் அவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கின்றார்களோ தெரியாது.

ஹக்கீம், ரிசாட், மனோ அமர்வில் பங்கு கொண்டது, ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் அதிகாரத்தில் எப்படியாவது தெங்கிக் கொண்டிருப்பார். அதுவரைக்கும் அவருடன் நல்லுறவில் இருந்து ஏதாவது அறுவடைகளைப் பெரும் நோகக்கமாக அந்த உறவு இருக்கலாம்.

நன்றி: 12.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

எதிர்பார்த்த தீர்ப்பு !

Next Story

இலங்கை: தேர்தல் நடக்குமா? பிரசாரத்தை ஆரம்பிக்காத வேட்பாளர்கள் - காரணம் ?