ரணில் பசில் அழைப்புக்கள்;!

-நஜீப்-

மீண்டும் எதிரணியில் இருக்கின்ற பலர் ரணிலின் கரத்தைப் பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அரசுக்குத் தாவ இருக்கின்றார்கள். அவர்களுக்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் பலர் மீண்டும் பகிரங்கமாக பேசி வருகின்றார்கள்.

அதே நேரம் மொட்டுக் கட்சி கோட்பாதர் பசில் மீண்டும் அந்தக் கட்சியை மீட்டெடுப்பது பற்றி தாரான்மைவாதத்துடன் பேச ஆரம்பித்திருக்கின்றார். அவர் விமல் வீரவன்சவுக்கும் தம்முடன் மீண்டும் வந்து இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். அதே போன்று  பிரிந்து சென்ற ஏனையோருக்கும் அழைப்பு விடுக்கின்றார்.

இதன் பின்னர் தனது குடும்பத்தில் அரசியல் தொடர்பான உறவுகள் மஹிந்த ராஜபக்ஸவுடன் மட்டுமே இருக்கும் என்று அவர் கூறிவருகின்றார். அடுத்தவர்கள் அவரைக் கைகழுவி விட்டார்களா அல்லது அவர் அடுத்தவர்களைக் கை கழுவி விட்டாரோ தெரியாது.

எனவே அரசியல் செய்ய நிறையவே காசு தேவை. அந்த பணம் தேவைக்கும் அதிகமாக அவர்களிடத்தில் இருக்கின்றது. எனவே பணத்தை வீசி விளையாட்டுக்களைக் காட்டவும் இடமிருக்கின்றது. என்ன நடக்கும் என்பதனை நாமும் பொறுத்துப் பார்ப்போம்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 04.12.2022

Previous Story

 போதைப்பொருள், கோதுமை மாவாக மாறும் விநோதம்

Next Story

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக்கு பிணை?