இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 7இல் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் அமைந்துள்ள பகுதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
வீட்டுக்குள் சிக்கிக் கொண்ட மைத்திரி!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் சற்று முன்னர் போராட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டு சுக்குநூறாகத்தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது.
பிரதமரின் முக்கிய அதிகாரியொருவருடன் உரையாடிய போது வீட்டிற்குள் தொடர்ந்தும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க மனைவி தங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார்.
பேராசிரியர் மைத்திரி கடுமையான நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர் தனது வீட்டு பணியாளர்களுடன் வீட்டிற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து கேள்வியுற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்விடத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக கேள்வி.
இரவு நேர பறப்புக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாத நிலையில் பெரும்பாலும் சிறிய ரக விமானம் ஒன்றின் மூலமாக அவர் கொழும்பை வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.